அசோக் லேலாண்ட் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை

 

அசோக் லேலாண்ட் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை

அசோக் லேலாண்ட் ஊழியர்களுக்கு இன்று முதல் 9ம் தேதி வரை கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:  அசோக் லேலாண்ட் நிறுவனம்,  ஊழியர்களுக்கு இன்று முதல் 9ம் தேதி வரை கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வணிக ரீதியான ஆட்டோ மொபைல் துறையின் வாகனங்கள் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அசோக் லேலாண்ட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 5 நாட்கள் உற்பத்தியை முடக்குவதால் நிரந்தர, ஒப்பந்த தொழிலாளர்கள் என்று 9,000 பேர் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. விடுமுறை நாட்களுக்குண்டான சம்பள விவரங்கள் பற்றி பின்னர் அறிவிக்க படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன .