அசுர வேகத்தில் வந்த ஸ்கூல் வேன்.. விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

 

அசுர வேகத்தில் வந்த ஸ்கூல் வேன்.. விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

வழக்கமாகத் தெருவில் விளையாடும் குழந்தை நேற்றும் அதே போல விளையாடிக் கொண்டிருந்துள்ளது.

நெல்லை மாவட்டம், திசையன் விளை அருகே உள்ள பெட்டைக்குளம் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். இவருக்கு மகேஷ் என்னும் இரண்டு வயது மகன் இருந்தார். வழக்கமாகத் தெருவில் விளையாடும் குழந்தை நேற்றும் அதே போல விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது எதிரே வேகமாக வந்த தனியார் வேன் குழந்தை  மோதியதால், ரத்த காயங்களுடன் துடித்துக் கொண்டிருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் குழந்தையை நாகர்கோவில் ஆசாரி பள்ளம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

ttn

ஆனால் விபத்தில் குழந்தை படுகாயம் அடைந்ததால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளது. இது குறித்து குழந்தையின் தாய்  திசையன்விளை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில்,  இட்டமொழி என்னும் பகுதியைச் சேர்ந்த வேன் டிரைவர் செல்வன்(20) கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், செல்வன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.