‘அசுர வேகத்தில் வந்த லாரி’.. தூக்கி வீசப்பட்ட தம்பதி : கணவன் கண்முன்னே மனைவிக்கு நேர்ந்த சோகம்!

 

‘அசுர வேகத்தில் வந்த லாரி’.. தூக்கி வீசப்பட்ட தம்பதி : கணவன் கண்முன்னே மனைவிக்கு நேர்ந்த சோகம்!

அதிகரித்து வரும் வாகனங்களாலும், விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுவதாலும் பல விபத்துகள் நடக்கின்றன.

அதிகரித்து வரும் வாகனங்களாலும், விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுவதாலும் பல விபத்துகள் நடக்கின்றன. சென்னை அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு செல்லியம்மன் நகரைச் சேர்ந்தவர்கள் சேட்டு- சகுந்தலா தம்பதி. இவர்கள் இரண்டு பேரும் அம்பத்தூரிலிருந்து அயப்பாக்கம் வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளனர். அச்சமயம் இவர்களுக்கே எதிரே அசுர வேகத்தில் லாரி ஒன்று வந்துள்ளது. 

ttn

லாரியை பார்த்த சேட்டு, லாரியிடம் இருந்து விலகிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால், அந்த லாரி சேட்டு மற்றும் சகுந்தலா சென்ற பைக் மீது மோதியுள்ளது. இதனால், இருவரும் பக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சேட்டு பலத்த காயங்களுடன் உயிர் பிழைக்க, சகுந்தலா லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற அயப்பாக்கம் போலீசார், சகுந்தலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சேட்டுவையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்துக்குக் காரணமான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.