அசிங்கப்படுத்திய துரைமுருகன்… துடைத்துக் கொண்ட வைகோ- திருமா..!

 

அசிங்கப்படுத்திய துரைமுருகன்… துடைத்துக் கொண்ட வைகோ- திருமா..!

எதிர்த்து பேசினால் இல்லை. ஏன் என்று விளக்கம் கேட்டாலே கூட்டணியில் இருந்து கழற்றி விட்டுவிடுவார்கள் என நினைத்து இருவரும் அமைதி காத்து வருகிறார்கள்.

சொந்தக் கட்சி, கூட்டணிக் கட்சி, எதிர்கட்சி என எந்தக் கட்சியினராக இருந்தாலும் சரி யோசிக்காமல் நக்கலடித்து விடுவது துரைமுருகனின் வழக்கம். 

சமீபத்தில் நடந்த, தி.மு.க பொதுக்குழுவில், பொருளாளர் துரைமுருகன் பேசும்போது, ‘நம்ம கட்சிக் தலைவர் ஸ்டாலினை எதிர்த்தவங்க எல்லாம் இன்னைக்கு நம்ம தயவால எம்.பி.,யாகி இருக்காங்க. அதுக்கு, ஸ்டாலினின் சாமர்த்தியம் தான் காரணம்’ என பேசினாராம்.

duraimurugan

”கடந்த சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணி என தனியாக ஒரு அணி அமைத்து போட்டியிட்ட வைகோ, திருமாவளவன், கம்யூ., கட்சிக்காரர்களை தான் துரைமுருகன் கிண்டல் அடித்தார். இதனை கேள்விப்பட்ட வைகோவும், திருமாவளவனும் ’ கூட்டணிக் கட்சி என்றும் பார்க்காமல் இப்படி அசிங்கப்படுத்திட்டாரே துரைமுருகன்’ என வருத்தப்படுகிறார்கள்.

எதிர்த்து பேசினால் இல்லை. ஏன் என்று விளக்கம் கேட்டாலே கூட்டணியில் இருந்து கழற்றி விட்டுவிடுவார்கள் என நினைத்து இருவரும் அமைதி காத்து வருகிறார்கள்.