அசால்ட்டாக ஆஃப் அடிக்கும் பள்ளி மாணவிகள்! வைரல் வீடியோவால் பெற்றோர்கள் அச்சம்!!
பள்ளி மாணவிகள் சிலர் கூட்டாக அமர்ந்து மது குடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
பள்ளி மாணவிகள் சிலர் கூட்டாக அமர்ந்து மது குடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
ஆண்கள் மட்டுமே மது அருந்திய, புகைபிடித்த காலம் போய் இன்று பெண்களும் ஆண்களுக்கு நிகராக போதை பழக்கங்களுக்கு அடிமையாகிவருகின்றனர். இங்கு ஒரு படி மேலே போய் பிஞ்சிலே பழுத்த பழமாய் மாணவிகளும் கூட்டாக அமர்ந்து மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களை அதிரவைத்து வருகிறது. இந்த சம்பவம் அரியலூர் மாவட்டம் செந்துறை என்ற பகுதியில் தான் அரங்கேறியுள்ளது.
கிராமத்து பள்ளி மாணவிகள் 3 பேர் மது வாங்கிக்கொண்டு காட்டுப் பகுதிக்கு சென்று ரசிகசியமாக குடிக்கின்றனர்.இதனை பார்த்த அந்த மாணவிகளின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை பார்க்கும்போது மதுவால் வளரும் தலைமுறையினர் தவறான பாதைக்கு செல்கின்றனரா என்ற அச்சம் ஏற்படுகிறது.
— ⚔️Waiting Thalapathy64⚔️ (@Avbalakrishnan5) February 22, 2020
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் டாக்டர் ராமதாஸ், “அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவிகள் சீருடையுடன் மது அருந்துவதாக காணொலி காட்சிகள் பரவி வருவது மிகவும் வேதனையளிக்கிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். மதுவில்லாத தமிழகம் தான் மாணவர் சமுதாயத்தையும், மக்களையும் காப்பாற்றும்!” என குறிப்பிட்டுள்ளார்.