அசந்து தூங்கிய பெற்றோர்…2 வயது குழந்தையை கடத்திய இளைஞர்; 48 மணிநேரத்தில் மீட்ட போலீசார்!

 

அசந்து தூங்கிய பெற்றோர்…2 வயது குழந்தையை கடத்திய இளைஞர்; 48 மணிநேரத்தில் மீட்ட போலீசார்!

புகாரின் அடிப்படையில் போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர். 

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜார் அலி. இவருக்கு  மெர்ஜினா என்ற மனைவியும்,  ரசிதா என்ற  2 வயது குழந்தையும் உள்ளனர். அஜார் அலி,   கடந்த 12ம் தேதி இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் மனைவி மற்றும் குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு குழந்தை ரசிதாவை காணவில்லை. இதை தொடர்ந்து குழந்தையை காணவில்லை என்று  சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் அஜார் அலி புகார் கொடுத்திருந்தார்.  புகாரின் அடிப்படையில் போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர். 

ttn

இதனிடையே மும்பையிலிருந்து நாகர்கோவில் செல்லும் விரைவு ரயில் திண்டுக்கல் அருகே உள்ள பாளையம் ரயில் நிலையத்தில் ஒருவர் சந்தேகத்திற்கு உரிய வகையில்  குழந்தையுடன் இருப்பதை  கண்ட பயணிகள் சிலர் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்,  மேற்கு வங்க மாநிலம் குல்டிகிரி பகுதியைச் சேர்ந்த தீபக் மண்டல்  என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் குழந்தை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன குழந்தை என்பது தெரியவந்தது. 

ttn

திண்டுக்கல் ரயில்வே போலீசார் தீபக் மண்டல் மற்றும் 2 வயது குழந்தையை சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து  48 மணிநேரத்தில் குழந்தை பத்திரமாக பெற்றோரிடம் சேர்க்கப்பட்டதுடன், தீபக் மண்டல் கைது செய்யப்பட்டார்.