அசத்திய அருண் எக்செல்லோ-கலக்கிய கவுசல்யா -அருண் எக்செல்லோ இணைந்து வழங்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் ஒரு மாற்றுத்திறனாளி கோடீஸ்வரி ஆனார்…
அருண் எக்செல்லோ எப்போதும் முழு குடும்பத்தினருடனும் நல்ல தொடர்பைக் கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடன் அசத்திக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது .
அருண் எக்செல்லோ நிறுவனம் குடும்பத்துடன் கண்டு களிக்கும் பல நிகழ்ச்சிகளை இணைந்து வழங்கி வருவது தொலைக்காட்சியை தொடர்ந்து பார்க்கும் பலருக்கும் தெரியும். அந்த வரிசையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சியையும் இணைந்து வழங்கி வருகிறார்கள்.
பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கோடிஸ்வரி நிகழ்ச்சி, உலகிலேயே இதுதான் முதல் முறை. அந்தப் பெருமையை கலர்ஸ் தொலைக்காட்சி தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.
பேச்சு மற்றும் கேட்கும் திறன் அற்றவரான கௌசல்யா, இந்த முறை கேள்விகளை எதிர்கொண்டு சரியான விடைகளைச் சொன்னதன் மூலம் ஒரு கோடி ரூபாய் பரிசாக வென்றிருக்கிறார். இதுவரை நடந்த கோடீஸ்வரன் நிகழ்ச்சியிலும் சரி,ராதிகா சரத்குமார் நடத்தும் கோடீஸ்வரி நிகழ்ச்சியிலும் சரி… ஒரு மாற்று திறனாளி பெண் ஒரு கோடி பரிசை வென்றிருப்பதும் இதுவே முதல் முறை.
இந்த சாதனையைக் கொண்டாடும் வகையில் அருண் எக்செல்லோ நிறுவனம் தங்களது அலுவகத்திற்கு சாதனைப் பெண் கவுசல்யாவை வரவழைத்து கௌரவம் செய்திருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியின் போது நிறுவனத்தின் உயர் அதிகாரி பேசும் போது.. “இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாடு முழுவதிலுமுள்ள பெண்களின் கனவை நிறைவேற்ற இந்த அற்புதமான வாய்ப்பை வழங்கிய திரு.அனுப் சந்திரசேகரன் மற்றும் கலர்ஸ் தமிழ் குழுவுக்கு எங்கள் நிறுவனத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படி ஒரு நிகழ்ச்சியில் நாங்களும் உடன் இருக்கிறோம் என்பது பெருமிதம் கொள்ள வேண்டிய தருணம்… இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்கள் ஃப்ரெண்ட்ஸ் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் : சியர்ஸ்!” என்றார்.