அங்கன்வாடி மையங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு வீடுதேடி சென்று உணவுகளை வழங்க உத்தரவு 

 

அங்கன்வாடி மையங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு வீடுதேடி சென்று உணவுகளை வழங்க உத்தரவு 

கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள ப்ரீகேஜி , எல்கேஜி , யூகேஜி தொடங்கி ஐந்தாம் வகுப்புகளுக்கு 16ஆம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை என்று உத்தரவிட்ட தமிழக அரசு, பொதுமக்கள் யாரும் அதிகமாக கூட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகள், வணிக வளாகங்கள், கேளிக்கை பூங்காக்களை மார்ச் 31 வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் தவிர வேறு நிகழ்ச்சிகளை திருமண மண்டபங்களில் நடத்த கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. 

அங்கன்வாடி

இந்நிலையில் அங்கன்வாடி மையங்கள் அனைத்தும், மார்ச் 31 ஆம் தேதி வரை மூட முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அங்கன்வாடி மையங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு தேவையான உணவுகளை அவர்களது குடும்பத்தினரிடம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.