அக்ஷரா ஹாசனின் அந்தரங்கப் புகைப்படங்கள் லீக்: இது உன் வேலையா? கோபப்பட்ட அக்ஷரா; விளக்கம் அளித்த காதலன்!
நடிகை அக்ஷரா ஹாசனின் அந்தரங்கப் புகைப்படங்களை வெளியிட்டதாகக் கூறப்பட்ட விவகாரத்தில் அவரது முன்னாள் காதலர் விளக்கம் அளித்துள்ளார்.
மும்பை: நடிகை அக்ஷரா ஹாசனின் அந்தரங்கப் புகைப்படங்களை வெளியிட்டதாகக் கூறப்பட்ட விவகாரத்தில் அவரது முன்னாள் காதலர் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் கமல் ஹாசனின் இளைய மகளும், நடிகையுமான அக்ஷரா ஹாசன் கடந்த 2015ம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த ‘ஷமிதாப்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து தல அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் களமிறங்கினார். தற்போது விக்ரம் நடித்து வரும் ‘கடாரம் கொண்டான்’ படத்தில் அக்ஷரா நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Hot Leaked pics of Shruti Haasan Sister #AksharaHaasan #ShrutiHaasan pic.twitter.com/rvY7BUVvw8
— Actress HottesT (@actress_boners) November 2, 2018
இந்நிலையில், அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் சில இணையத்தில் லீக்காகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து மும்பை போலீஸில் புகார் அளித்திருப்பதாகவும், இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அக்ஷரா ஹாசன் கூறியிருந்தார்.
இந்நிலையில், அக்ஷரா அளித்த புகாரின் அடிப்படையில், மும்பை வெர்சோவா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விவகாரத்தில் அக்ஷரா ஹாசனின் முன்னாள் காதலர் தனுஜ் விர்வாணியிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தவுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி விளக்கம் அளித்துள்ள தனுஜ் விர்வானி கூறும்போது, ‘என்னிடம் போலீசார் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. விசாரணை செய்தால் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கத் தயாராக இருக்கிறேன். நவம்பர் 2 ஆம் தேதி அவரது இந்த புகைப்படங்கள் வெளியானது பற்றி அறிந்தேன். உடனடியாக அக்ஷராவுக்கு போன் செய்து விசாரித்தேன். அவர், இது உன் வேலையா? என்று கேட்டார். இல்லை என்றேன். இதுபற்றி போலீசில் புகார் செய்ய இருக்கிறேன் என்றார். செய் என்றேன்.இல்லையென்றால், யார் இந்த புகைப்படங்களை வெளியிட்டது என்பது தெரியாமல் போய்விடும் என்றேன். நாங்கள் பிரிந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. அதனால் அவரது புகைப்படங்களை நான் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. என்னிடம் இருந்த அவரது புகைப்படங்களை நான் அழித்துவிட்டேன். எங்கள் இருவருக்கும் காதலித்தபோதும் பிரிந்த போதும் எந்த கசப்பான சம்பவங்களும் நடக்கவில்லை. இது அக்ஷராவுக்கும் தெரியும்’ என்று தெரிவித்தார்.