அக்குவேராகப் பிரிக்கும் திமுக… மு.க.ஸ்டாலின் அதிரடி..!

 

அக்குவேராகப் பிரிக்கும் திமுக… மு.க.ஸ்டாலின் அதிரடி..!

நிர்வாக ரீதியாக கட்சியில் நிறைய பிரச்னைகள் வருகிறது. அதனால், இரண்டு ஒன்றியங்களையும், மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளையும்,

திருவள்ளூர் மாவட்ட தி.மு.க.,வை மூன்றாகப் பிரிக்க போகிறார்கள். திருவள்ளூர், தி.மு.க., இப்போது வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டங்களாக இருக்கிறது. தெற்கில், ஆவடி நாசரும், வடக்கில், கும்மிடிபூண்டி வேணுவும் செயலர்களாக இருக்கிறார்கள். நாசர் கட்டுப்பாட்டில் இருக்கிற சோழவரம், புழல் ஒன்றியங்கள், சென்னை மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகள், மாதவரம் தொகுதிக்குள்ள வருகிறது. இந்த தொகுதி, எம்.எல்.ஏ., சுதர்சனம், வடசென்னை வடக்கு மாவட்ட, தி.மு.க., செயலராக இருக்கிறார்.

udhay

இதனால், நிர்வாக ரீதியாக கட்சியில் நிறைய பிரச்னைகள் வருகிறது. அதனால், இரண்டு ஒன்றியங்களையும், மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளையும், வடசென்னை வடக்கு மாவட்டத்தில் சேர்த்துவிட்டு, திருவள்ளூரை மூன்று மாவட்டங்களாக பிரித்து விடலாம் என தி.மு.க., தலைமை திட்டம் போட்டு இருக்கிறது.