அக்காவை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சிறுமி; அதிர வைக்கும் வாக்குமூலம்: ஊரடங்கு நேரத்தில் நடந்த பயங்கரம்!

 

அக்காவை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சிறுமி; அதிர வைக்கும் வாக்குமூலம்: ஊரடங்கு நேரத்தில் நடந்த பயங்கரம்!

தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்த நிலையில் 17 வயதாகும் 2 வது மகள் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

நாமக்கல் நகராட்சி கொசவம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி பழனிசாமி.  இவரின்  19 வயதான மூத்த மகள் மோனிஷா நாமக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்த நிலையில் 17 வயதாகும் 2 வது மகள் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தாய், தந்தை இருவரும் கூலிவேலைக்கு சென்றுவிட இளையமகள் கை அறுபட்டு கத்தி கூச்சல் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் என்ன விவகாரம் என்று விசாரிக்க, அக்காக்கு எனக்கும் சண்டை வந்து இருவரும் கையை அறுத்துக்கொண்டோம் என்று கூறியுள்ளார்.  மோனிஷா மூக்கில் ரத்தம் வழிந்துக்கொண்டு  மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல மோனிஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் சிறுமிக்கு மட்டும் சிகிச்சை அளித்துள்ளனர். 

tt

அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அக்கா மோனிஷா கை கிழிக்கப்பட்டு ரத்தம் சொட்டிய நிலையிலும், மூக்கில் ரத்தம் வடிந்த நிலையிலும் மயங்கிக் கிடந்தார். இதை அடுத்து இருவரையும் அக்கம்பக்கத்தினர் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பெற்றோருக்கு தகவல் அளித்து மருத்துவமனைக்கு வர வைத்தனர்.

ttn

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தங்கையிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  அதில், சிறுமியின் ஊரைச் சேர்ந்தவர் 19 வயதான ராகுல் மோனிஷா உடன்   கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் மோனிஷாவை காதலிப்பதாக சொல்ல அவரது நடவடிக்கை பிடிக்காத மோனிஷா காதலிக்க மறுத்துள்ளார். இதனால் மோனிஷாவின் தங்கையை காதல் தூதுக்கு பயன்படுத்த ஒருகட்டத்தில் சிறுமியும் ராகுலும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். 

tt

இது மோனிஷா காதுக்கு செல்ல தங்கையை கண்டித்துள்ளார். இதுகுறித்து சிறுமி காதலன் ராகுலிடம் சொல்ல, காதலுக்கு இடையூறாக இருக்கும் மோனிஷாவை கொலை செய்து விடலாமா என ராகுல் சிறுமியும் சரி என்று கூறி அம்மா, அப்பா வேலைக்கு சென்றதும்  வர சொல்லியுள்ளார். 

வீட்டுக்கு வந்த ராகுலை பார்த்து, இங்கு எதற்கு வந்தாய் என கேட்டு மோனிஷா சண்டை போட்டுள்ளார். அப்போது உன்னை கொலை செய்யத்தான் என்று கூறிய ராகுல் மோனிஷாவை கட்டிலில் தள்ளி முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியுள்ளார். இதில் மோனிஷாவின் மூக்கில் ரத்தம் வழிய ஆரம்பித்துள்ளது. இதை கண்ட ராகுல் பயத்தில் அங்கிருந்த ஓட, செய்வதறியாத சிறுமி மயக்கத்தில் இருந்த அக்காவின் கையை அறுத்துவிட்டு, தானும் கையை அறுத்துக்கொண்டு நாடகம் ஆடியது தெரியவந்தது. 

இதை அடுத்து சிறுமியை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிய போலீசார், சிறுமியின் காதலர் ராகுலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் நாமக்கல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.