ஃபேஸ்புக்கில் இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய இளைஞர்: அரிவாளால் சரமாரியாக வெட்டிய தந்தை!

 

ஃபேஸ்புக்கில் இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய இளைஞர்: அரிவாளால் சரமாரியாக வெட்டிய தந்தை!

சென்னை அம்பத்தூரில் சட்டக்கல்லூரியில் படித்து வந்தவர் மாணவி சத்யபிரியா. இவருக்கு பேஸ்புக் மூலம் லாரன்ஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சென்னை : ஃபேஸ்புக் மூலம் மகளிடம் பழகி ஏமாற்றிய இளைஞரை பெண்ணின் தந்தையே வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அம்பத்தூரில் சட்டக்கல்லூரியில் படித்து வந்தவர் மாணவி சத்யபிரியா. இவருக்கு பேஸ்புக் மூலம் லாரன்ஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், லாரன்ஸ் சத்யபிரியாவை திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். 

facebook

இந்நிலையில் காதலித்து விட்டு மகளை திருமணம் செய்துகொள்ள மறுத்த லாரன்ஸை சத்யபிரியாவின் தந்தை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த லாரன்ஸை அங்கிருந்தவர்கள் மீட்டு, கே.எம்.சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

kmc

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், மாணவியின் தந்தையை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ஃபேஸ்புக் மூலம் பழகி குடித்தனம் நடத்திவிட்டு மகளை ஏமாற்றியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.