ஃபீனிக்ஸ் மாலுக்கு சென்ற யாருக்கும் இதுவரை கொரோனா இல்லை: மாநகராட்சி ஆணையர்

 

ஃபீனிக்ஸ் மாலுக்கு சென்ற யாருக்கும் இதுவரை கொரோனா இல்லை: மாநகராட்சி ஆணையர்

ஊழியர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், சென்னை முதலிடத்திலும், திண்டுக்கல்,  ஈரோடு மாவட்டங்கள் 2ஆம் இடத்திலும் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் வேலை பார்த்து வந்த ஊழியர்களுக்கு, கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். 

ttn

அதனால், மார்ச் 10 முதல் மார்ச் 17 வரை சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மால் வணிக வளாகத்துக்கு குறிப்பாக லைப் ஸ்டைல் கடைக்கு சென்றவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் உடனே மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை பீனிக்ஸ் மாலுக்கு அந்த தேதிகளில் சென்ற 3,300 பேரை ஆய்வு செய்ததில் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.