கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டார். அவரை டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது சிறையில் சென்று சந்தித்து வருகின்றனர்.
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தொகையை செலுத்த தவறினால் ஒராண்டு நீடிக்கப்படும் என பெங்களூரு சிறைத்துறை தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஜெயலலிதா உடன் போயஸ் கார்டன் வீட்டிலிருந்தவர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.பின்பு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டார். அவரை டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது சிறையில் சென்று சந்தித்து வருகின்றனர்.
சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டதாகச் சிறைத் துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டியிருந்தார். இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது என்றும், சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீது குற்றம்சாட்டினார். சிறையிலும் சசிகலா நடத்திய சொகுசு வாழ்க்கை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது மூன்று ஆண்டுகள் சசிகலா சிறை தண்டனையை அனுபவித்துள்ளார். இதனால் அடுத்தாண்டு ஜனவரி 25ஆம் தேதி சசிகலா சிறையிலிருந்து வெளிவருவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு உச்சநீதிமன்றம் 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தொகையைச் செலுத்த தவறினால் ஒராண்டு நீடிக்கப்படும் என பெங்களூரு சிறைத்துறை தெரிவித்துள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் சசிகலா, 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதியே வெளிவர கூடும் என்று கூறப்படுகிறது.